Tuesday, June 28, 2011

இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்கள் அவசியமா?

"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு"
     கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றி அமையாத ஒன்று. இலங்கையை பொறுத்த வரையில், இது கல்வி தரத்தில் உயர் நிலை வகிக்கும் நாடு. விருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக இலங்கையின் கல்வி அறிவு வீதம் காணப்பட நாட்டின் இலவச கல்வியே பிரதான காரணம். இலவச கல்வியானது நாட்டின் தேசிய தலைவர்களின் முனைப்பான தொடர் போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்தது. இங்கு, c.w.w.கன்னங்கரா விதந்து குறிப்பிட வேண்டியவர். இதன் விளைவாக 1947 களின் பின் நாம் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியை பெற முடிந்தமை நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். இக் கல்வி முறை உலகளாவிய ரீதியில் தனித்துவம் மிக்கது.  இலங்கை உயர் கல்வி அறிவு வீதம் கொண்ட நாடாக இருந்த போதிலும் அதன் கல்வி தரம் சர்வதேச நாடுகளுக்கு நிகராக இல்லை எனவும், நடைமுறைக்கு பொருத்தம் குறைந்த கல்வி எனவும் சில கருத்து நிலைகள் உலா வருகின்றன. இலங்கையை பொறுத்த வரை பெருமளவில் தரமான கல்வி அரசினால் மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்து நிலைகள் பல தரப்பினரிடையேயும் நிலவுகின்றது. எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை இலங்கையின் கல்வி புலத்தில் எவ்வாறான மாறுதலை உண்டு பண்ணும் என்பதனை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். மேலும் படிக்க...      

No comments:

Post a Comment