Monday, June 20, 2011

பேராதனை மாணவர் விடுதிகள்

 இலங்கையில் உள்ள பெரும் பாலான பல்கலைக் கழகங்களில் மாணவருக்கான விடுதிகள் உள்ளன. இவை  பல்கலை கழக சட்ட
திட்டங்களுக்கு அமைவாக மாணவர் சேவைக் கிளையினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
              பல்கலைக் கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை என்பது மறக்க முடியாதது.காலத்தால் அழியாத நினைவுகளை விட்டுச் செல்லும். அந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகமானது பெரும்பாலான மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்கி வருகிறது. இங்குள்ள 15 மண்டபங்களிலும் 4 பிக்கு விடுதிகளிலும் சுமார் 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி தமது பட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர். அத்துடன் மகா இலுப்பலமாவில் உள்ள விவசாய பீட வளாகத்தில் உள்ள விடுதியானது 1ம் வருட மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்குகிறதுஇது பேராதனையில் இருந்து சுமார் 130km தூரத்தில் அமைந்துள்ளது. விடுதிகளின் ஒழுக்கங்களை பேணுவதில் விடுதி காப்பாளர்களின் பங்கு அளப்பரியது. இவர்கள் கல்வி சார், சாரா உழியர்களாக இருப்பார்கள்.
                       விடுதிகள் கல்வி கற்கும் வசதியுடைய படுக்கை அறைகளைக் கொண்டது.ஒவ்வொரு அறைகளிலும் சராசரியாக 3 மாணவர்கள் மாணவர்கள் தங்கி இருப்பார்கள். பேராதனைப் பல்கலைக்கழக விடுதிகளை பொறுத்த வரை தவணைக் கட்டணமாக 750 ரூபா அறவிடப்படுகிறது. அத்துடன் இங்குள்ள சிற்றுண்டிச் சாலைகளில் குறைந்த விலைகளில் சாப்பாடுகள் வழங்கப் பட்டு வருகிறது.
 .



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகள் வருமாறு:
                                
  ஆண்களுக்கானது:-
  •  ஜேம்ஸ் பீரிஸ் மண்டபம்

  • அருணாச்சலம் மண்டபம்

  • அக்பர்நெல் மண்டபம்
                    
  • மார்கஸ் மண்டபம்
                
             

  • சரசவி உயன மண்டபம்
  • ஜெயதிலகே மண்டபம்


                   




  • ஹிந்தகல மண்டபம்
  • புதிய அக்பர் மண்டபம்



  • சார் ஐவரர் ஜென்னிங்க்ஸ்   மண்டபம்
                                      
   பெண்களுக்கானது:-
  • ஹில்டா ஒபெயேசெகரா மண்டபம்


      
        
  • விஜேவர்தன மண்டபம் 

        

  • ராமநாதன் மண்டபம் 
                 



  • சங்கமித்த மண்டபம்
       


     பிக்குகளுக்கானது:-
  • சங்கரமைய
  • கேஹெல்பன்னால மண்டபம்

    No comments:

    Post a Comment