எமது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை விட்டுப் பிரிந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2007 பிரிவு மாணவர்களான சுஜீவன் - கலிஸ்ரஸ், இருவரின் நினைவாக எமது மாணவர்கள் யுத்தத்தால் பெற்றோரை, அனைத்து சொந்தங்களை இழந்த சிறார்களுக்கு ஒரு சிறிய உதவிக்கரம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் நிமித்தம் சென்ற சனிக்கிழமை ( 06 - 08 - 2011 ) வவுனியவிலுள்ள புனித டொண் பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு சென்ற மாணவர்கள் எமது நண்பர்களின் நினைவாக அவர்களின் ஆன்ம அமைதி வேண்டி அருட்தந்தை ஜோன்சன் அடிகளாரின் தலைமையில் ஒரு சிறிய இறைவேண்டுதலுடன் நிகழ்வை ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து அருட்சகோதரிகளின் உதவியுடன் சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்,விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உடைகள் போன்ற அடிப்படை அன்பளிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து E-07 மற்றும் ஏனைய பிரிவு மாணவ நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள்.