பல்கலை வாழ்வில் இரு வருடங்கள் எம்முடன் பயணித்து இன்று எம்மை விட்டு பிரிந்தும் எம் நினைவுகளில் கலந்து விட்ட எம் நண்பன் அன்ரன் யோகராஜா கலிஸ்ரஸ் கயேந்திரனின் ( கலிஸ்) பிறந்த நாள் நினைவாக E/07 மாணவ நண்பர்கள் கடந்த சனிக்கிழமை திருகோண மலையிலுள்ள சிவானந்த தபோ வனத்துக்கு சென்றிருந்தார்கள். அங்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள சிறுவர்களுக்கு மதிய போசனம் வழங்கி அவர்களுடன் அளவளாவி அன்றைய பொழுதை செலவிட்டு மகிழ்ந்தார்கள். எம் நண்பன் முன்னெடுத்துச் சென்ற பணியை தொடர்ந்து, ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
its great to hear
ReplyDeletegood work guys.......
ReplyDelete