Friday, September 16, 2011

கலிஸ்ரஸ்-சுஜீவன் ஞாபகார்த்த கிரிக்கட் தொடர்


E/07 மாணவர்களான கலிஸ்ரஸ்,சுஜீவன் நினைவாக நடை பெற்ற 12 ஓவர்கள் கொண்ட மென் பந்து கிரிக்கட் தொடரில் E/07 மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
             கடந்த வியாழக்கிழமை (15 -09 -2011) பேராதனை பல்கலைக் கழக மைதானத்தில் மின்னொளியில் E/08  மாணவர்களால் நடாத்தப்பட்ட இத்தொடரில் 5 அணிகள் மோதின. இதில் இறுதிச் சுற்றுக்கு E/07- E/08/A  அணியினர் தெரிவு செய்யப் பட்டனர். 
                விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற  E/07 அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய  E/08 அணியினர் 12  ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு களமிறங்கிய  E/07 அணியினர் 63 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிரஞ்சன் தெரிவு செய்யப் பட்டார். 

No comments:

Post a Comment